கோவை:
கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் இடையில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு (19), தனுஷ் (19), அவினவ் (19), அனுருத் (19) அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைவாணன் (21) ஆகிய 5 பேர் அவர்கள் தங்கும் அறையிலேயே கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவர்கள் 5 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings