in

கும்பமேளாவிற்குச் சென்ற கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு

போபால்,

மத்தியப் பிரதேசத்தின் சிங்க்ரெவுலி மாவட்டத்தில் உள்ள வைதானில் இருந்து பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நோக்கி சொகுசு காரில் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது பக்த கற்களை ஏற்றிச் சென்ற வாகனத்தைக் கடக்கும்போது சொகுசு கார் கவிழ்ந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து சித்தி மாவட்டத்தில் உள்ள அமஹியா காவல் நிலைய எல்லைக்குட்டப்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சேலம் மார்க்கம்: ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

மருத்துவமனையில் இருந்து கொலைக் குற்றவாளி தப்பி ஓட்டம்