நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் (17ம் தேதி) மிதமான மழையும். 18.05.2024 மற்றும் 19.05.2024 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையினை கருத்தில் கொண்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படாத வகையில், ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தகுந்த முன் எச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் இருக்கவும், மின்சாதனங்களை கவனமுடன் கையாளவும், மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழைக்காலங்களில் நீர்நிலைகளில் நீரின்வரத்து அதிகமாக வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளில் குளிக்க செல்ல வேண்டாம் எனவும், கடலில் சீற்றம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கடற்கரை பகுதிக்கு செல்லவேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தால் கேட்டுக் கொள்ளப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings