in

3வது சம்பவம்: ராசிபுரத்தில் நாய் கடித்து 3 குழந்தைகள் காயம்

நாமக்கல்:

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா காவலாளியின் 5 வயது மகள் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த புகழேந்தி என்பவருக்கு சொந்தமான ராட் வைலர் இனத்தை சேர்ந்த இரு வளர்ப்பு நாய்கள் கடித்தது. 

இதில் அந்த சிறுமி படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில் நாயை வளர்த்த புகழேந்தி, அவரது மனைவி, மகன் ஆகியோரை கைது செய்தனர.

இந்த நிலையில் சென்னை ஆலந்தூர் பகுதியில் உறவினர் வீட்டிற்கு வந்த சிறுவன் அஸ்வந்த்தை வளர்ப்பு நாய் கடித்து காயமடைந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த இரு சம்பவத்தை அடுத்து நாமக்கல்லில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெறிநாய் கடித்ததில் 3 குழந்தைகள் காயம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வடுகம் பகுதியில் வெறிநாய் கடித்ததில் 3 குழந்தைகள் காயமடைந்தனர். விளையாடிக் கொண்டிருந்தபோது வெறிநாய் கடித்ததில் 3 குழந்தைகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தங்கம் விலை இன்று அதிரடி குறைவு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் யூடிபூபர் சவுக்கு சங்கர்