in

36 வயது பெண் கூட்டுப் பலாத்காரம்; 3 பேர் கைது

பெங்களூரு:

கர்நாடகாவில், சாலையில் தனியாக நடந்து சென்ற 36 வயது பெண்ணை, கூட்டுப் பலாத்காரம் செய்த 3பேர் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு கோரமங்களா ஜோதி நிவாஸ் சந்திப்பு பகுதியில், ஒரு தனியார் கல்லூரி உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் 36 வயது இளம்பெண் ஒருவர், சாலையில் தனியாக நடந்து சென்றார்.

அப்போது அந்த பெண்ணை அருகில் உள்ள உணவகத்துக்கு தூக்கிச்சன்ற சென்ற நபர் உட்பட நான்கு நபர்கள் சேர்ந்து, பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்தனர். இதன்பின், பெண்ணின் பர்ஸ், மொபைல் போனை பறித்துவிட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பெண் அளித்த புகாரில், உணவகம் ஊழியர்களான மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அஜித், 30, விஸ்வாஸ், 29, ஷிவு, 30 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்பெண்ணை உணவகத்துக்கு தூக்கிச்சன்ற நபர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடுகின்றனர்.

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் 3 பேரின் குடும்பத்துக்குத் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.64,360-ஐ தொட்டது !