கரூர்:
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ராஜேந்திரம் பஞ்சாயத்து பகுதி, பரளி நான்கு ரோடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை வழிமறித்து சோதனை செய்தனர்.
அந்த வாகனங்களில் 316 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 16 ஆயிரம் ஆகும். இதனை கடத்தி வந்த திருச்சி மாவட்டம், முசிறி, மேற்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (வயது 34). ஸ்ரீரங்கம் தாலுக்கா, பெட்டவாய்த்தலை, பகுதி பழங்காவேரியை சேர்ந்த பொன்னன் மகன் கண்ணன் (64) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings