மணலி:
சென்னையை அடுத்த மணலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விமலா புரத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் நாராயணன் (வயது 43). இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தாருடன் பெங்களூரு சென்றிருந்தார்.
திரும்பி வந்து வீட்டை பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து காவல்நிலையத்தில் நாராயணன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளை போன வீட்டின் தடயங்களை சேகரித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கண்காணிப்பு கேமராவின் பதிவின் அடிப்படையாக கொண்டு புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜி என்கிற மஸ்தான் வயது 24 என்பவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட கொள்ளையன்னி டமிருந்து 25 சவரன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் ராஜி என்கிற மஸ்தான் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings