புதுடெல்லி
வந்தே பாரத் என்கிற அதி விரைவு ரயில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது 5 ரயில்கள் இயக்கப்பட்டு வருகினறன. கூடுதலாக சென்னை எழும்பூர் – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே என இரு தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்சேவை புதன்கிழமை தவிர வாரத்தின் மற்ற 6 நாட்கள் இயக்கப்படும்.
அதேபோல் மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் சேவை செவ்வாய்க்கிழமையை தவிர வாரத்தின் மற்ற 6 நாட்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings