சென்னை:
சென்னை (ஈசிஆர்) கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் பாட்டியுடன் வசித்து வரும் 13 வயது சிறுமிஅதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
நேற்று பள்ளிக்கு சென்று சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது பாட்டி, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பள்ளி முடிந்து சுமார் ஒரு மணி நேரம் பள்ளி அருகே சிறுவனுடன் அந்த சிறுமி பேசிக் கொண்டிருந்தது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதனை போலீசார் கைப்பற்றினர்.
அதைத் தொடர்ந்து சிறுமியுடன் பேசிக் கொண்டிருந்த சிறுவனின் செல்போன் நெட்வொர்க்கை பின் தொடர்ந்த போலீசார் திருவான்மியூரில் உள்ள தனியார் விடுதியில் இருந்ததை கண்டறிந்தனர்.
அங்கு சென்ற போலீசார் சிறுமி உள்பட 3 பேரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீசார் விசாரணையில், பெற்றோர் இல்லாமல் பாட்டியிடம் வளர்ந்து வந்த 13 வயது சிறுமிக்கு பாட்டி செல்போன் பயன்படுத்த வேண்டாம் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டோடு வளர்த்து வந்துள்ளார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டின் பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்துள்ளார் சிறுமி. அதே பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவனை சிறுமி காதலித்து வந்ததாகவும், பாட்டியின் தொல்லையால் நாம் திருமணம் செய்துகொண்டு எங்கேயாவது சென்று வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று சிறுவனை சிறுமி மூலைச் சலவை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் சிறுமி சிறுவன் இருவரையும் ஊருக்கு அனுப்பி வைக்க உதவிய நபரும் கைது செய்யப்பட்டார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings