in

துறையூரில் “அம்பேத்கர் மிஷன்” நிறுவனர் தொண்டு வ.வீராசாமியின் 105வது பிறந்தநாள் விழா

திருச்சி

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் கிராமத்தில் 15-08-1919 ஆம் ஆண்டு சிறு விவசாய ஏழை குடும்பத்தில் பிறந்தவர்தான் தொண்டுவ.வீராசாமி.பின் தங்கிய வகுப்பு என்பதால் இவர் கல்லூரி படிப்பை முடிக்க அக்காலத்தில் மிகப்பெரும் வலிகளை சுமந்ததாக வரலாறு.

கஷ்டப்பட்டு முன்னேற்றம் அடைந்து பிற்காலத்தில் 1952 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் ஒரு சாதாரணமான அடக்கமான அமைதி மிகுந்த சமூக தொண்டனாக பணியாற்றியவர்.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரையும் அறிவுலக மேதை தாழ்த்தப்பட்ட மக்களின் தனிப்பெரும் தலைவர் இந்திய அரசியல் சாசனத்தந்தை பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கரை பின்பற்றி தீவிரமான சமூக ஊழியனாக இருந்து வந்துள்ளார்.

துறையூர் பெருமாள் மலை அடிவாரம் தெற்கு சொரத்தூர் பகுதியில் அமைந்துள்ள இவர் நிறுவிய அகில இந்திய அம்பேத்கர் மிஷினில் இவரின் 105வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் மிஷினில் படித்த மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், மற்றும் இவருடைய கல்லறையில் நினைவஞ்சலி, கல்லறை அருகே புத்தர் சிலை திறப்பு, தேசியக்கொடி ஏற்றி வீரவணக்கம் செலுத்தியது, மரக்கன்றுகள் நட்டு வைத்தல், சிறப்புரை ஆற்றியது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவிற்கு தொண்டுவ.வீராசாமியின் மகளுமான மிஷனின் தலைவருமான மருத்துவர் தமிழரசி தலைமை தாங்கினார்.மிஷனின் பொதுச்செயலாளர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பெ.ரம்யா, திராவிடர் கழக துறையூர் மாவட்ட தலைவர் முன்னாள் அரசு தலைமை ஆசிரியர் மணிவண்ணன், மிஷன் பொருளாளர் பெரியசாமி, டாக்டர்கள் சுப்பையா, கண்ணன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் உத்திராபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொருளாளர் பெரியசாமி அகில இந்திய அம்பேத்கர் மிஷன் கட்டிட நிதியுதவி அளித்து.கட்டிடத்தை திறந்து வைத்தார்.

மேலும் துணைத்தலைவர் விவேகானந்தன், செயலாளர் சேகர்,ராஜமாணிக்கம், ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் மணிவண்ணன், ஆசிரியர்கள் முருகேசன், ரமேஷ் ஆகியோர் அம்பேத்கர் மிஷன் வளர்ச்சி பணியினை பற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.

அகில இந்திய அம்பேத்கர் மிஷனில் கல்வி பயின்ற மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஆசிரியர் பிரேமா தலைமையில் நடைபெற்றது. மாணவ மாணவிகளுக்கு மிஷன் பொதுச் செயலாளர் பெ.ரம்யா மற்றும் சொரத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி பரிசுகளை வழங்கினார்கள். மிஷன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்டாலின் நன்றியுரை நிகழ்த்தினார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பெரம்பூர் ரயில் நிலையத்தில் குழந்தை பெற்ற பெண்

பொழிச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 78 வது சுதந்திர தின விழா