சென்னை:
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 44 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ₹2.52 கோடிக்கான காசோலைகளைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர், அவர் பேசும்போது, “கடந்த 4 வருடத்தில் மட்டும், 153 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ₹19 கோடி அளவுக்கு அரசு உயரிய ஊக்கத் தொகையாக வழங்கி இருக்கின்றது. விளையாட்டுத்துறையைத் தேர்ந்தெடுக்கின்ற மாற்றுத்திறனாளிகளுடைய எதிர்காலத்தை மனதில் வைத்து, அரசு உங்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கி வருகின்றது.
மேலும், சட்டமன்றத்தில் உங்களுக்காக அறிவிக்கப்பட்ட 6 பாரா ஸ்போர்ட்ஸ் அரங்கங்களும் இந்த ஜுன் மாதத்திற்குள் திறந்து வைக்கப்பட்டு உங்களுடைய பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்’ என்றார்.
in சென்னை
44 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ₹2.52 கோடி ஊக்கத் தொகை

GIPHY App Key not set. Please check settings