in

முதல் அமைச்சரின் தனிச் செயலராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்

சென்னை:

தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா வரும் அக்டோபரில் ஓய்வுபெற உள்ளதை அடுத்து, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் பதவிக்கு, முதல்வரின் செயலர் நிலை 1-ல் இருந்த நா.முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.  தலைமைச் செயலகம் வந்த நா.முருகானந்தம், தமிழகத்தின் 50-வது தலைமைச் செயலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், முதல்வரின் தனிச் செயலராக உமாநாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது செயலாளராக எம்.எஸ்.சண்முகம், மூன்றாவது செயலாளராக அனு ஜார்ஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது,

2001-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்-ஐ சேர்ந்த உமாநாத், 2010-ஆம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கீழக்கரை கடற்கரையில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் கழிவுநீர்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு